செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள்

Published On 2021-03-19 13:52 GMT   |   Update On 2021-03-19 13:52 GMT
திரையரங்குகளில் இனி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முந்தைய கட்டுப்பாடுகளுடன் மாநிலம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திரையரங்குகளில் இனி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி என்றும், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக கவசம் அணியாதவர்களை அரங்குகள், அலுவலகங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு மார்ச் 31ம்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News