செய்திகள்
கொரோனா வைரஸ்

நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா தொற்று குறைந்தது

Published On 2021-06-23 09:15 GMT   |   Update On 2021-06-23 09:15 GMT
மத்திய-மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தியது. நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா முதல் மற்றும் 2-வது தொற்று காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தியது. நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்தநிலையில் நீடாமங்கலம் வட்டாரத்தில் 2 ஆண்கள் மட்டுமே கொரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் சுகாதார துறையினர் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரையும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் பாதிக்கப்பட்ட வர்களின் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Tags:    

Similar News