செய்திகள்
கோப்புபடம்

களக்காடு அருகே மது விற்றவர் கைது

Published On 2020-11-24 13:26 GMT   |   Update On 2020-11-24 13:26 GMT
களக்காடு அருகே மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சிங்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 51) என்பவர் சாக்குப்பையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். 

இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மது பாட்டில்களும், ரூ.150-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News