ஆன்மிகம்
கடலூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை

கடலூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை

Published On 2021-10-18 05:01 GMT   |   Update On 2021-10-18 05:01 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 1008 சகஸ்ரநாம அர்ச்சனையும், ஊஞ்சல் சேவையும், விடையாற்றி உற்சவமும் நடைபெற்றது.
கடலூர் மஞ்சக்குப்பம் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 10-ந் தேதி வாஸ்து சாந்தி மற்றும் கருடவதுஜப் பிரதிஷ்டை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் யாகசாலை ஹோமம், திருமஞ்சனம், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையடுத்து யாக சாலை ஹோமம் நடந்ததும், புரட்டாசி திருவோண கருடசேவை நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 1008 சகஸ்ரநாம அர்ச்சனையும், ஊஞ்சல் சேவையும், விடையாற்றி உற்சவமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.
Tags:    

Similar News