செய்திகள்
விபத்து

விருகம்பாக்கத்தில் ஜீப் மோதி பெண் பலி

Published On 2019-09-22 10:27 GMT   |   Update On 2019-09-22 10:27 GMT
விருகம்பாக்கத்தில் ஜீப் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நேற்று இரவு உஷா (60) நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

பாண்டிபஜார் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஜீப் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமிரா வீடியோ மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News