வழிபாடு
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தெப்போற்சவம் நிறைவு

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தெப்போற்சவம் நிறைவு

Published On 2022-02-17 04:13 GMT   |   Update On 2022-02-17 04:13 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு நாளான நேற்று உற்சவர் கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கோவில் உள்ளேயே ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் நேற்று நிறைவடைந்தது. கோவில் உள்ளேயே தெப்போற்சவ கைங்கர்யம் நடந்தது.

முன்னதாக நேற்று காலை 10.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

அதையொட்டி மாலை உற்சவர் கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கோவில் உள்ளேயே ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர். அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News