செய்திகள்
உச்சநீதிமன்ற வாசல்

டெல்லி உச்சநீதிமன்றம் வாசல் முன் இருவர் தீக்குளித்ததால் பரபரப்பு

Published On 2021-08-16 07:51 GMT   |   Update On 2021-08-16 07:51 GMT
டெல்லி உச்சநீதிமன்றம் வாசல் முன் இருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்திய நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
இந்திய தலைநகர் டெல்லியில் உச்சநீதிமன்றம் அமைந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாகவும், பாதுகாப்பு நிறைந்த பகுதியாகவும் காணப்படும்.

அப்படிப்பட்ட உச்சநீதிமன்றத்தில்  ‘டி’ எண் கொண்ட நுழைவாயில் பகுதியில் இன்று காலை திடீரென ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் தங்கள் மீது தீவைத்து கொளுத்திக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் தீயை அணைத்து அவர்களை மீட்டனர்.

காயம் அடைந்த அவர்கள் இருவரும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News