இந்தியா
கொரோனா பரிசோதனை

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

Published On 2021-12-05 13:46 GMT   |   Update On 2021-12-05 13:46 GMT
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், ஒமைக்ரான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவியத் தொடங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி மற்றும் பெங்களூருவை சேர்ந்த டாக்டர், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஒருவர், தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பியவர் ஆகியோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதேபோல் தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 8 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News