ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பல்லக்கு சேவை

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பல்லக்கு சேவை

Published On 2021-03-18 07:17 GMT   |   Update On 2021-03-18 07:17 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை உற்சவர் கோதண்டராமர், பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத்தொடர்ந்து உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் இரவு கருட வாகன சேசவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் கோவில் துணை அதிகாரி பார்வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News