செய்திகள்
வாணியம்பாடியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
வாணியம்பாடி புதூரில் உள்ள காந்தி சிலை அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி புதூரில் உள்ள காந்தி சிலை அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் போடப்பட்டது. நகராட்சி பணியாளர்களால் ஏற்கனவே வீடு வீடாக கணக்கு எடுக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டோர்களை செல்போன் மூலம் அழைத்து முகாமிற்கு வரவழைத்து அங்கு தடுப்பூசி போட்டனர். மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை தலைமையில், மேலாளர் ரவி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், அலி மற்றும் சுகாதார துறையினர் இப்பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.