செய்திகள்
கொள்ளை

கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

Published On 2021-02-21 04:30 GMT   |   Update On 2021-02-21 04:30 GMT
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே கீளப்பூடி என்ற இடத்தில் தமிழக அரசின் 2 மதுக்கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கடையின் மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர்கள் ஆறுமுகம், நரசிம்மன் ஆகியோர் விற்பனையை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை கடைக்கு சென்று பார்த்தபோது இரு கடைகளிலும் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. ஒரு கடையில் இருந்த 96 மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த கடையில் இருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் தப்பியது.

பூட்டு உடைக்கப்பட்ட மற்றொரு கடையில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் இருந்தது. அந்த கடையில் மது பாட்டில்கள் மற்றும் பணம் எதுவும் திருட்டு போகவில்லை. இது குறித்து மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News