செய்திகள்
அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன் - நடிகர் ரஜினிகாந்த்
அரசியல் கட்சியை தொடங்கவிருந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்திருந்த ரஜினிகாந்த் அதன்பின்னர் இப்போதுதான் சந்திக்கிறார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை வந்தார்.
இந்த நிலையில் அவர் இன்றைய தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இதனால் காலை முதலே ரசிகர்கள் கோடம்பாக்கத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர் அரசியல் கட்சியை தொடங்கவிருந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்திருந்தார். அதன்பின்னர் இப்போதுதான் சந்திக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:-
மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன்.
அண்ணாத்த படப்பிடிப்பு இருந்ததால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை.
எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்கலாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்பேன் என தெரிவித்தார். இதனையடுத்து அவர் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதற்காக கோடம்பாக்கம் புறப்பட்டார்.