செய்திகள்
பிரிட்டன் ராணி எலிசபெத்

‘பிரெக்சிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை - பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை

Published On 2019-10-15 04:32 GMT   |   Update On 2019-10-15 04:32 GMT
வருகிற 31-ந்தேதிக்குள் ‘பிரெக்சிட்’டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கூறினார்.
லண்டன்:

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கைக்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்.பி.க்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால் ஒப்பந்தமில்லா ‘பிரெக்சிட்’டுக்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்தநிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் 31-ந்தேதிக்குள் ‘பிரெக்சிட்’டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், “திட்டமிட்டபடி 31-ந்தேதிக்குள் ‘பிரெக்சிட்’டை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அரசு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும்” என கூறினார். 
Tags:    

Similar News