செய்திகள்
குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை
கோவை சிங்காநல்லூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜ புரத்தை சேர்ந்தவர் பழனிசாமி. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக வெங்கடேஸ்வரி மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட வெங்க டேஸ்வரியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.