வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தி கோவில்

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி தொடக்கம்

Published On 2022-02-22 09:04 GMT   |   Update On 2022-02-22 09:04 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி பக்தகண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.

24-ந்தேதி மாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருேக மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோவில் வளாகத்தில் பக்தகண்ணப்பர் கொடியேற்றம் நடக்கிறது. அன்று உற்சவர் பக்தகண்ணப்பர் கோவிலின் மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

25-ந்தேதி மதியம் 1 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடக்கிறது.

அன்று காலை 9 மணியளவில் வெள்ளி அம்பாரிகளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் வெள்ளி அம்பாரிகளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

26-ந்தேதி காலை 9 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

27-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

28-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் ேசஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி சிகர நிகழ்ச்சியான மகாசிவராத்திரி விழா, காலை 10 மணியளவில் இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 10 மணியளவில் நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

2-ந்தேதி அதிகாலை 2 மணியளவில் லிங்கோத்பவ தரிசனம், காலை 10 மணியளவில் தேரோட்டம், இரவு 9 மணியளவில் கோவில் அருகில் உள்ள நாரத புஷ்கரணியில் தெப்போற்சவம்.

3-ந்தேதி காலை 9 மணியளவில் அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலில் இருந்து மணமக்கள் அலங்காரத்தில் புறப்பட்டு நகரி தெருவில் உள்ள கோவிலின் திருக்கல்யாண மண்டபம் வரை ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

4-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-ஞானப்பிரசுனாம்பிகை தாயார் திருக் கல்யாண உற்சவம், காலை 9 மணியளவில் ருத்ராக்‌ஷ அம்பாரிகளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் நகரி வீதியில் இருந்து கோவில் வரை உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இரவு 9 மணியளவில் சபாபதி திருக்கல்யாண உற்சவம்.

5-ந்தேதி காலை 9 மணியளவில் கைலாசகிரி மலைக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் அம்பாரிகளில் கிரிவலம் சென்று திரும்புதல், இரவு 9 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

6-ந்தேதி காலை 10 மணியளவில் கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம், இரவு 9 மணியளவில் சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

8-ந்தேதி இரவு 9 மணியளவில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரே உள்ள சைன மந்திரத்தில் ஏகாந்த சேவை (வழக்கமாக கோவிலில் தினமும் இரவு 9 மணியளவில் ஏகாந்த சேவை நடக்கும். ஆனால், மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தால் 12 நாட்களுக்கு பிறகு கோவிலில் ஏகாந்த சேவை நடப்பது குறிப்பிடத்தக்கது) நடக்கிறது. இதோடு வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

9-ந்தேதி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் மூலவர்ளுக்கு சாந்தி அபிஷேகம் நடக்கிறது.

மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News