செய்திகள்
தற்கொலை

கோவையில் சிறுமியை காதலிக்க பெற்றோர் எதிர்ப்பு- வாலிபர் தற்கொலை

Published On 2021-03-25 10:49 GMT   |   Update On 2021-03-25 10:49 GMT
கோவையில் சிறுமியை காதலிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

பொள்ளாச்சி ஓ.எஸ்.பி நகர் பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் மகன் அங்கு ராஜ் (21). கூலி தொழிலாளி. இவர் கோவில்பாளையம் அருகே கொண்டையம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் 18 வயது பூர்த்தியாகாத சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த இவரின் பெற்றோர் மைனர் பெண்ணை காதலிக்கக் கூடாது என எச்சரித்தனர். இதில் மனமுடைந்த அங்குராஜ் நிறுவன வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

சிங்காநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (43). கூலித்தொழிலாளி. இவர் 20 ஆண்டாக மனைவியை பிரிந்து தனிமையில் வசித்து வந்தார். சமீபத்தில் நடந்த விபத்தில் இவரது காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த சிகிச்சையில் இவரது கால் அகற்றப்பட்டது. இதில் மனமுடைந்த சின்னசாமி வீட்டில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News