செய்திகள்
தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2021-11-23 10:11 GMT   |   Update On 2021-11-23 10:11 GMT
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப். இவரது மகன் விமல் (வயது 19). சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் ஓபசமுத்திரம் படகு துறை அருகே சென்ற மாணவர் விமல், அங்கு கொக்கு மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அவரை உறவினர்கள் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் விமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News