செய்திகள்
ஊராட்சி எச்சரிக்கையை மீறி நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டும் பொதுமக்கள் - கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி நிர்வாகம் எல்லைக்குட்பட்ட நீர் வழித்தடத்தில் பலரும் குப்பை கொட்டுகின்றனர்.
அவிநாசி:
அவிநாசி நகர் மற்றும் கிராமப்புறங்களில் ஏராளமான குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இந்தநிலையில் நீர் வழித்தடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவது போன்ற செயல்களில், இறைச்சி கடைக்காரர்கள் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி நிர்வாகம் எல்லைக்குட்பட்ட நீர் வழித்தடத்தில் பலரும் குப்பை கொட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள ‘பிளக்ஸ் பேனரில்’, இவ்விடத்தில் மழைநீர் செல்லும் பல்லாவாரி உள்ளது.
இந்த நீரை தான் நாம் குடிக்கிறோம். இங்கு குப்பை கொட்டி மாசுப்படுத்த வேண்டாம். மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எச்சரிக்கையை மீறி மக்கள் குப்பைக் கொட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.