செய்திகள்
போலீஸ் பணிக்கான உடல் தகுதித்தேர்வு
தமிழகம் முழுவதும் 2-ம் நிலை போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடைபெற்றது
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் 2-ம் நிலை போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. விருதுநகரிலும் கே.வி.எஸ். பள்ளியில் இத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் 2229 பேர் பங்கேற்கின்றனர். நேற்று ஆண்கள் 800 பேருக்கு மட்டும் தேர்வு நடைபெற்றது. இன்று(வியாழக் கிழமை) பெண்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடைபெறுகிறது.
இத்தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து 12-ந் தேதி வரை நடைபெறும் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க உள்ளனர். இப்பணிகளை கண்காணிக்க காவல் பயிற்சி பள்ளி டி.ஐ.ஜி. சத்தியபிரியா சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரை மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரனும் தேர்வு பணிகளை மேற்பார்வையிட்டார். இத்தேர்வு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் 2-ம் நிலை போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. விருதுநகரிலும் கே.வி.எஸ். பள்ளியில் இத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் 2229 பேர் பங்கேற்கின்றனர். நேற்று ஆண்கள் 800 பேருக்கு மட்டும் தேர்வு நடைபெற்றது. இன்று(வியாழக் கிழமை) பெண்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடைபெறுகிறது.
இத்தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து 12-ந் தேதி வரை நடைபெறும் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க உள்ளனர். இப்பணிகளை கண்காணிக்க காவல் பயிற்சி பள்ளி டி.ஐ.ஜி. சத்தியபிரியா சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரை மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரனும் தேர்வு பணிகளை மேற்பார்வையிட்டார். இத்தேர்வு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.