உள்ளூர் செய்திகள்
மரணம்

திருக்கோவிலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

Published On 2022-01-16 11:41 GMT   |   Update On 2022-01-16 11:41 GMT
திருக்கோவிலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(வயது 45). தொழிலாளியான இவர் மது குடிக்கம் பழக்கம் உடையவர். இதனால் அவரது மனைவி சுமதி(39) கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் மணலூர்பேட்டையில் வசித்து வந்தார். ராமு அவ்வப்போது தனது மகள் பிரியதர்ஷினியை பார்த்து செல்வார். வழக்கம்போல் கடந்த 14-ந் தேதி மகளை பார்த்து விட்டு மீண்டும் மாம்பழப்பட்டு செல்வதாக கூறி சென்ற ராமு மணலூர்பேட்டை சந்தமேடு பகுதியில் இறந்து கிடந்தார். இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News