செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அப்போது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி லட்சுமண ராவ் தெரு மெகந்தர் (வயது 20), பெட்டமுகிலாளம் கணபதி (23), லட்சுமிபுரம் சுசீலா (45), சின்ன எலசகிரி ரோஹித் (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.