செய்திகள்
மரணம்

பேரிகை அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

Published On 2020-11-18 07:05 GMT   |   Update On 2020-11-18 07:05 GMT
பேரிகை அருகே பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

பேரிகை அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோடியப்பா (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள சிவப்பா என்பவரது நிலத்தில் புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்தது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோடியப்பா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News