செய்திகள்
கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி விலகல்

Published On 2021-03-14 01:47 GMT   |   Update On 2021-03-14 01:47 GMT
தமிழ்நாடு இளைஞர் கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறியதால் அந்த கட்சிக்கு முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் மக்கள் நீதி மய்யம் தள்ளப்பட்டுள்ளது.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முன்வந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு செங்கல்பட்டு, வேப்பனஹள்ளி, காட்பாடி மற்றும் திருவாரூர் ஆகிய 4 தொகுதிகள் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டன. இந்தநிலையில், தொகுதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி வெளியேறியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் ராஜசேகர் கூறுகையில், “நல்லவர்கள் கூடாரம் குழப்பவாதிகள் கூடாரம் ஆகிறது என்ற நெருடலும், இளைஞர்களின் நம்பிக்கையை அங்கு அடகு வைக்க தேவையில்லை என்பதாலும் மக்கள் நீதி மய்யம் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறுகிறோம்” என்றார்.

தமிழ்நாடு இளைஞர் கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறியதால் அந்த கட்சிக்கு முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் மக்கள் நீதி மய்யம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அணியில் இணைந்து பயணிக்க, தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பரிசீலித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News