செய்திகள்
சீனிவாசன்

திருவள்ளூர் அருகே போலி டாக்டர் கைது

Published On 2020-09-28 03:30 GMT   |   Update On 2020-09-28 03:30 GMT
திருவள்ளூர் அருகே போலி டாக்டரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பூண்டி கிராமம் தபால் நிலைய தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 49). இவர் அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்து கடை நடத்தி வருகிறார். பி.எஸ்சி. வேதியியல் பட்டதாரியான அவர், இ.சி.ஜி. பயிற்சியும் முடித்துள்ளார். இந்த நிலையில், சீனிவாசன் கடந்த 5 ஆண்டுகளாக முறையான டாக்டர் பட்டம் பெறாமல் பொதுமக்களுக்கு தனது மருந்து கடையில் வைத்து அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து புல்லரம்பாக்கம் போலீசார் போலி டாக்டர் சீனிவாசனை நேற்று கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News