வழிபாடு
திருமலை வசந்த மண்டபத்தில் தன்வந்திரி பூஜை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தன்வந்திரி பூஜை, நைவேத்தியம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தன்வந்திரி பூஜை பிரார்த்தனையுடன் முடிந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பூஜை நடப்பது வழக்கம். அதன்படி விஷ்ணு பூஜை நடந்தது. அதன் ஒரு பகுதியாக தன்வந்திரி ஜெயந்தியையொட்டி திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று காலை 9.30 மணியில் இருந்து பகல் 11 மணி வரை தன்வந்திரி பூஜை நடந்தது. இந்தப் பூஜை ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசமூர்த்தி முன்னிலையில் தன்வந்திரி பகவானை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர். முதலில் அனைத்துத் தெய்வங்களையும் மணியோசையுடன் வரவழைத்து, கார்த்திகை விஷ்ணு பூஜை செய்து, உலக மக்கள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. அதன்பிறகு தன்வந்திரி பூஜை, நைவேத்தியம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தன்வந்திரி பூஜை பிரார்த்தனையுடன் முடிந்தது.
தன்வந்திரி பூஜையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் மற்றும் அலுவலர்கள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசமூர்த்தி முன்னிலையில் தன்வந்திரி பகவானை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர். முதலில் அனைத்துத் தெய்வங்களையும் மணியோசையுடன் வரவழைத்து, கார்த்திகை விஷ்ணு பூஜை செய்து, உலக மக்கள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. அதன்பிறகு தன்வந்திரி பூஜை, நைவேத்தியம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தன்வந்திரி பூஜை பிரார்த்தனையுடன் முடிந்தது.
தன்வந்திரி பூஜையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் மற்றும் அலுவலர்கள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.