செய்திகள்
விபத்து பலி

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி பெண் பலி

Published On 2021-05-01 01:19 GMT   |   Update On 2021-05-01 01:19 GMT
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

போச்சம்பள்ளி தாலுகா கோட்டனூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 46). விவசாயி. இவர், தனது தங்கை தமிழ்செல்வி (43) மற்றும் பூங்கொடி (38) ஆகிய 2 பேருடன் மோட்டார்சைக்கிளில் போத்தனூர்-ராமாபுரம் சாலையில் பள்ளத்துகொட்டாய் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். பெரியசாமி, பூங்கொடி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News