ஆன்மிகம்
விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்
விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.
கும்பகோணம் பாலக்கரை நீலத்தநல்லூர் ரோடு பகுதியில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதம்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று வைகாசி மாத அமாவாசையையொட்டி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.
அதன்படி நேற்று வைகாசி மாத அமாவாசையையொட்டி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.