ஆன்மிகம்
கீழப்பாவூர் வேணுகோபால கிரு‌‌ஷ்ணசுவாமி கோவிலில் கருட சேவை

கீழப்பாவூர் வேணுகோபால கிரு‌‌ஷ்ணசுவாமி கோவிலில் கருட சேவை

Published On 2019-10-14 06:17 GMT   |   Update On 2019-10-14 06:17 GMT
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வேணுகோபால கிரு‌‌ஷ்ணசுவாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வேணுகோபால கிரு‌‌ஷ்ணசுவாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது. விழாவில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

இதேபோல் கீழப்பாவூர் நவநீதகிரு‌‌ஷ்ணன் கோவில், ராமர் கோவில் ஆகியவற்றிலும் கருடசேவை நடைபெற்றது. மேலும் முக்கூடல் வடக்கு ராமசாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் அலங்காரம், அபிஷேகம், பூஜைகள், ஆஞ்சநேயர் சுவாமி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி, கோலாட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News