செய்திகள்
செயின் பறிப்பு

ஆலாந்துறை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு- போலீசார் விசாரணை

Published On 2019-10-02 10:21 GMT   |   Update On 2019-10-02 10:21 GMT
ஆலாந்துறை அருகே பெண்ணிடம் இருந்து 6 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தர்மராஜ் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி சென்றனர்.

பின் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தர்மராஜ் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.

கோவை ஆலாந்துறை ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் இவரது மனைவி முத்து (வயது 30). பூலுவம்பட்டி ராமநாதபுரம் அருகே ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கடையில் ஸ்வீட் வாங்குவது போல் நடித்து அவர் அசந்த நேரம் பார்த்து அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த முத்து அலறி சத்தம் போட்டார். ஆனால் பொதுமக்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து ஆலாந்துறை போலீசில் முத்து புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News