செய்திகள்
மரணம்

பேராவூரணி அருகே ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலி

Published On 2019-10-19 10:20 GMT   |   Update On 2019-10-19 10:20 GMT
பேராவூரணி அருகே ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேராவூரணி:

சீர்காழி அடுத்த நல்லூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது31). இவர் லாரி வாங்கி புக்கிங் ஆபீஸ் மூலம் பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சரக்குகள் ஏற்றி கொண்டு போய் இறக்கி விட்டு வருவது வழக்கம்.

நேற்று அவர் மதியம் தனது நண்பர்களான ராமநாதபுரம் கருப்பசாமி மற்றும் திருவாரூர் விஜயகுமார் ஆகியோருடன் பேராவூரணி அருகே கொன்றைக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.

லாரியை நிறுத்தி விட்டு 3 பேரும் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முருகவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி விட்டார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரெத்தினவேல் அளித்த தகவலின் படி தீயணைப்பு மீட்பு படையினர், சப்-இன்ஸ்பெக்டர் இல.அருள்குமார் ஆகியோர் விரைந்து வந்து முருகவேல் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாசில்தார் ஜெயலெட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News