செய்திகள்
ஆற்காட்டில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய ஆட்டோக்களுக்கு அபராதம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறி இயங்கிய ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற தவறுகளைத் தொடர்ந்து செய்து வந்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் எனவும் தாசில்தார் எச்சரிக்கை விடுத்தார்.