செய்திகள்
டிடிவி தினகரன்

ஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்

Published On 2021-01-27 10:27 GMT   |   Update On 2021-01-27 10:27 GMT
சசிகலா விடுதலையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று சசிகலாவை அழைத்துச் செல்வோம். நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலா வருகைக்காக காத்திருக்கின்றனர். அவரது வரவேற்பு தமிழகத்தில் சிறப்பானதாக இருக்கும். 

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் பற்றி பேச விரும்பவில்லை.  ஜெ.நினைவிடம் திறந்ததைப் பார்க்கும்போது சசிகலா விடுதலையைக் கொண்டாடுவது போல் தான் தோன்றுகிறது. அ.தி.மு.க.வை மீட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொடுக்க முயற்சி நடக்கிறது என்று கூறினார்.

அ.தி.மு.க. - அ.ம.மு.க. இணையுமா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். 
Tags:    

Similar News