வழிபாடு
திருநள்ளாறு நளநாராயணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது
திருநள்ளாறில் உலகபுகழ்பெற்ற சனீஸ்வரபகவான் தர்பாரண்யேஸ்வரர் கோவிலை சேர்ந்த நளநாராயணப்பெருமாள் கோவில் 5 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநள்ளாறில் உலகபுகழ்பெற்ற சனீஸ்வரபகவான் தர்பாரண்யேஸ்வரர் கோவிலை சேர்ந்த நளநாராயணப்பெருமாள் கோவில் 5 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத நளநாராயணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிகம்பம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் நடத்தி, வேதமந்திரங்கள் கூறி கொடிக்கம்பத்தில் கருடக்கொடியை ஏற்றி வைத்தனர்.
பின்னர் சாமிக்கும், கொடி கம்பத்திற்கும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத நளநாராயணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிகம்பம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் நடத்தி, வேதமந்திரங்கள் கூறி கொடிக்கம்பத்தில் கருடக்கொடியை ஏற்றி வைத்தனர்.
பின்னர் சாமிக்கும், கொடி கம்பத்திற்கும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.