செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகரில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

Published On 2021-09-04 10:49 GMT   |   Update On 2021-09-04 10:49 GMT
விருதுநகரில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக உறவுக்கார பையனை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் சித்தியின் பராமரிப்பில் சிறுமி இருந்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு 17 வயதுடைய உறவுக்கார பையன் ஒருவன் சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு சிறுமி மறுத்துள்ளார். அதற்கு காதலிக்கவில்லை என்றால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் சிறுமியும் காதலித்து வந்தார்.

இதற்கிடையில், யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரும் உறவுக்கார பையன் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுமியை திருமணம் செய்து தருமாறு அவரது சித்தியிடமும் தகராறு செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் சித்தி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாயமான உறவுக்கார பையனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News