செய்திகள்
கோப்பு படம்

கோவை அருகே மனைவி கடன் வாங்கித் தராததால் வாலிபர் தற்கொலை

Published On 2019-12-10 10:00 GMT   |   Update On 2019-12-10 10:01 GMT
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மனைவி கடன் வாங்கித் தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவரது மனைவி ஆனந்த ஜோதி (வயது 38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது.

இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் தனது மனைவியிடம் யாரிடமாவது கடன் வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் விஜயகுமார் மனவேதனையுடன் காணப்பட்டார்.

சம்பவத்தன்று ஆனந்த ஜோதி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் வீட்டிற்கு வந்து பார்த்த போது விஜயகுமார் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தார்.

ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சோம சுந்தரம் (வயது 45). இவருக்கு உடல்நிலை சரியில்லாததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சாணி பவுடரைக் குடித்து வாந்தி எடுத்தார்.

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சோமசுந்தரத்தை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் வி‌ஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News