செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2021-08-02 08:03 GMT   |   Update On 2021-08-02 09:03 GMT
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும், நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கடலோர மாவட்டம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.



சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News