செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் இன்று புதிதாக 15,759 பேருக்கு கொரோனா - 378 பேர் பலி

Published On 2021-06-11 13:58 GMT   |   Update On 2021-06-11 13:58 GMT
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,24,597 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,24,597 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,18,595 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 29,243 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,20,889 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 378 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 28,906 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,056 பேரும், ஈரோட்டில் 1,365 பேரும், சென்னையில் 1,094 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
Tags:    

Similar News