செய்திகள்
தற்கொலை

ஏரியூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2021-05-16 09:49 GMT   |   Update On 2021-05-16 09:49 GMT
ஏரியூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள ராமகொண்ட அள்ளி கானிக்காடு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 67). விவசாயி. இவருக்கு ரத்தினம்மாள் என்ற மனைவியும், சரவணன், குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் முனுசாமிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News