செய்திகள்
குண்டுவெடிப்பு நடந்த மசூதி

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடித்து 12 பேர் பலி

Published On 2021-10-03 20:31 GMT   |   Update On 2021-10-03 20:31 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்புகள் பொறுப்பேற்ற பின் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா என்ற மசூதியில் திடீரென நேற்று குண்டுவெடிப்பு ஒன்று நடந்துள்ளது.  இதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி காரி சயீத் கோஸ்டி கூறியுள்ளார். இதையடுத்து 3 பேரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Tags:    

Similar News