செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

Published On 2021-01-23 17:48 GMT   |   Update On 2021-01-23 17:48 GMT
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16,531 ஆக உயர்ந்து உள்ளது
விருதுநகர்:

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16,531 ஆக உயர்ந்து உள்ளது

மாவட்டத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 355 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 16,528 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

16,245 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 3,376 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 52 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16531 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவுகள் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News