ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் நாளை மற்றும் மறுதினம் ஆன்லைனில் வெளியீடு

Published On 2021-10-21 05:04 GMT   |   Update On 2021-10-21 07:23 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
திருமலை :

திருப்பதியில் தரிசனம் செய்ய நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டோக்கன் நாளை மறுதினம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

டிக்கெட் பெற்று வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வருகிற 25ந் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது எனவே பக்தர்கள் http:// Tirupati Balaji. AP. gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.300 கட்டணத்தில் ஏற்கனவே 8 ஆயிரம் டிக்கெட் வெளியிடப்பட்டது. தற்போது அது 10 ஆயிரம் டிக்கெட்டாகவும் இலவச தரிசனத்தில் வெளியிடப்பட்ட 8 ஆயிரம் டோக்கன் தற்போது 12 ஆயிரம் டோக்கனாகவும் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 27,878 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,741 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News