தமிழ்நாடு
பாலியல் தொல்லை

நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் - போக்சோவில் 2 பேர் கைது

Published On 2022-01-13 09:53 GMT   |   Update On 2022-01-13 09:53 GMT
பண்ருட்டி அருகே மருத்துவ முகாமுக்கு அழைத்து சென்று நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பண்ருட்டி:

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள ஏ.கே .குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் பிரபாவதி (வயது 17). இவர் பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

நேற்று பிரபாவதி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது.

இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

பிரபாவதி படித்து வந்த நர்சிங் கல்லூரியில் மாதம் தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படுவது உண்டு. கடந்த மாதம் சேலம் அருகே உள்ள ஏற்காடு பகுதியில் மருத்துவ முகாம் நடந்தது. இந்த மருத்துவ முகாமிற்கு பிரபாவதி உள்ளிட்ட மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த நிஷா, டேவிட், அன்பு, பிரேம் ஆகியோர் சென்றனர். ஏற்காடு பகுதியில் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கினர். பின்னர் மாணவிகளிடம் பிரபல ஆஸ்பத்திரிகளில் வேலை வாங்கி தருவதாக உடன் சென்றவர்கள் ஆசை வார்த்தை கூறினர். இதில் மயங்கிய மாணவிகளுக்கு மது கொடுத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் அனைவரும் ஒன்றும் நடக்காதது போல் வீடு திரும்பினர். இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தினர் மீண்டும் மாணவிகளை மருத்துவ முகாம் செல்லலாம் என அழைத்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பிரபாவதியின் அண்ணனிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இந்த விசயம் தனது அண்ணனுக்கு தெரிய வந்ததால் நர்சிங் மாணவி பிரபாவதி தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

இதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செய்து கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த நிஷா, டேவிட், அன்பு மற்றும் பிரேம் உள்ளிட்டவர்களை வலை வீசி தேடி வந்தனர். இதற்கிடையில் பண்ருட்டியில் பதுங்கி இருந்து நிஷா, அன்பு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News