உள்ளூர் செய்திகள்
மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-12-01 09:07 GMT   |   Update On 2021-12-01 09:07 GMT
ஊதிய உயர்வு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம்:

பல்லடத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், பெடரேஷன் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மின் வாரியத்தில் உள்ள 60ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மின்வாரிய பணிகளுக்கு தரமான தளவாட பொருட்களை வழங்க வேண்டும், பயணப்படி வழங்க வேண்டும், சம்பளப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க வேண்டும், மின்சார திருத்த சட்டம் 2020 வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. சங்க செயலாளர் ராமலிங்கம், மற்றும் முத்துசாமி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News