செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

ஈரோட்டில் கிணற்றில் குதித்து தொழில் அதிபர் தற்கொலை

Published On 2019-12-03 07:01 GMT   |   Update On 2019-12-03 07:01 GMT
ஈரோட்டில் தொழில் அதிபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
ஈரோடு:

ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் தனசேகரன் என்பவரது மகன் கனகராஜ் (வயது47). இவருடைய மனைவி பெயர் வனிதா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

கனகராஜ் சக்திநகரில் 16 பவர்லூம் தறிகள் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வில்லரசம்பட்டி அருகிலுள்ள மொக்கயைம்பாளையம் சென்ற கனகராஜ் அப்பகுதியில் இருந்த பொது கிணற்றருகில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தீயணைப்பு துறை மற்றும் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு அக்கம்-பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கனகராஜ் உடலை மீட்ட வீரப்பன்சத்திரம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரப்பன் சத்திரம் போலீசார் தொழிலதிபர் கனகராஜ் எந்தக் காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் அதிபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
Tags:    

Similar News