வழிபாடு
காளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ரத சப்தமி விழா நாளை நடக்கிறது

Published On 2022-02-07 07:15 GMT   |   Update On 2022-02-07 07:15 GMT
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் ரத சப்தமி விழாவை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) ரத சப்தமி விழா நடக்கிறது. அதையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள (மூன்றாவது கோபுரம்) திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள சாயா உஷா தேவி சமேத சூரிய நாராயணசாமிக்கு காலை 7 மணியளவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

அதைத்தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் காலை (2-வது கால அபிஷேகத்துக்கு பின்) காலை 8 மணியளவில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News