செய்திகள்
தற்கொலை

கொரோனாவால் வருவாய் இழப்பு: டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-10-18 11:52 GMT   |   Update On 2020-10-18 11:52 GMT
ஸ்ரீரங்கம் அருகே கொரோனா ஊரடங்கால் போதிய வருவாய் இன்றி தவித்த டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:

ஸ்ரீரங்கம் அருகே கீழ அடையவளைஞ்சான் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவரது மனைவி ஹேமாவதி. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சரவணன், வாகனங்களில் மாற்று டிரைவராக வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் போதிய வருவாய் இன்றி சரவணன் சிரமப்பட்டு வந்தார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

சில நாட்களுக்கு முன்பு கணவருடன் சண்டையிட்டு கோபத்தில் 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு ஹேமாவதி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், மனவேதனை அடைந்த சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News