ஆன்மிகம்
பிரித்தியங்கிராதேவி

பஞ்சமுக பிரித்தியங்கிராதேவி கோவிலில் நவராத்திரி விழா

Published On 2021-10-09 08:57 GMT   |   Update On 2021-10-09 08:57 GMT
மானாமதுரையில் வேதியேரேந்தல் விலக்கில் உள்ள மகாபஞ்சமுக பிரித்தியங்கிராதேவி கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது
மானாமதுரையில் வேதியேரேந்தல் விலக்கில் உள்ள மகாபஞ்சமுக பிரித்தியங்கிராதேவி கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதில் சுமார் 2021 கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் காளி தேவி கொரோனாவை வதம் செய்யும் காட்சி, மகாபாரதம், ராமாயண காட்சிகள், ராஜராஜேஸ்வரி, காமாட்சி, மதுரை மீனாட்சி, சமயபுரம் மாரியம்மன், பிரித்தியங்கிராதேவி என அம்மன் அலங்காரம் மற்றும் மதுரை சித்திரை திருவிழா காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் கொரோனா விதிமுறைகள் முழுவதும் பின் பற்றி தடுப்பூசி போட்டு வந்தவர்களையும் மற்றும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சமுக இடைவெளியுடன் அன்னதானமும் நடந்தது.
Tags:    

Similar News