செய்திகள்

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க வந்த பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2019-04-17 09:15 GMT   |   Update On 2019-04-17 09:15 GMT
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க வந்த பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

திருக்கல்யாண விழாவை பக்தர்கள் சிரமமின்றி காண விழா பந்தல் மற்றும் ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் முன்பு அமர்ந்து பக்தர்கள் திருக்கல்யாண விழாவை கண்டுகளித்தனர்.

மதுரை பழங்காநத்தம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஞானசவுந்தரி (வயது 60) என்பவர் தெற்கு கோபுரம் அருகே அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரை முன்பு அமர்ந்து திருக்கல்யாண விழாவை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது யாரோ மர்ம மனிதன் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர்.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம மனிதனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News