செய்திகள்
வழக்கு பதிவு

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்- கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2021-08-29 10:11 GMT   |   Update On 2021-08-29 10:11 GMT
ராமநாதபுரத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோதினி (வயது 25). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தையல் நாயகி தோட்டம் சுப்பையா என்ற சுரேஷ் என்பவருக்கும் 13-12-2019ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பதிவு திருமணம் நடந்தது.

சுரேஷ் வேலைக்காக நெதர்லாந்து நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியவுடன் முறைப்படி 27-4-2020 அன்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது வரதட்சணையாக வினோதினிக்கு 60 பவுனும், கணவர் சுரேசுக்கு 9 பவுனும், ரூ.1லட்சம் பணமும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களும், ரூ.1,50,000 மதிப்புள்ள வெள்ளி பாத்திரங்களும், சீராக கொடுத்தனர்.

இந்த நிலையில் தினமும் வினோதினியை, சுரேஷ் கத்தியை காட்டி மிரட்டியதாகவும், மாமனார் லோகநாதன், மாமியார் தெய்வநாயகி, கணவரின் சகோதரர் அருண்குமார் ஆகியோர் சேர்ந்து தாக்கியும், அவதூறாக திட்டியதாகவும் தெரிகிறது. மேலும் கூடுதல் வரதட்சணையாக ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இது குறித்து வினோதினி ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சுரேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News