ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போனில் பேசியபடி மாடியில் இருந்து விழுந்த வாலிபர் பலி
ஸ்ரீபெரும்புதூர்:
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் (23). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிந்தார்.
சுங்குவார் சத்திரத்தை அடுத்த ஜோதிநகர் விவேகானந்தா தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தார். அவருடன் 5 பேர் தங்கியுள்ளனர்.
நேற்று பணி முடிந்து திரும்பிய அவர் தான் தங்கியுள்ள வீட்டின் 3-வது மாடிக்கு சென்றார். மொட்டை மாடியில் வைத்து அவர் மது குடித்ததாக தெரிகிறது. இதற்கிடயே இரவு பணிக்கு செல்லும் முன்பு உடன் தங்கியிருந்த பலர் இவரை பார்க்க மொட்டை மாடிக்கு வந்தனர்.
அங்கு அருண் இல்லை. வீட்டிலும் அவரை காணவில்லை. எனவே அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அவர் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். குடிபோதையில் செல்போன் பேசிய போது 3-வது மாடியில் இருந்து அருண் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.